ஓரினசேர்கையில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த இளம்பெண்கள்.! மண்டபம் தர மறுத்த உரிமையாளர்.! காரணம் இதுவா.?

Published by
பாலா கலியமூர்த்தி
  • தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மேகன் வால்டிங் 25 வயதும், மற்றும் லீ ஹீகீஸ் 24 வயதும் உடைய ஓர்பால் ஈர்ப்பாளர்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
  • மண்டபத்தின் உரிமையாளர் ஓர்பால் ஈர்ப்பாளர்கள் என்பதற்காக திருமண மண்டபத்தை தர மறுத்துள்ளார். அதற்கு காரணமாக, ஓர்பால் ஈர்ப்புத் திருமணம் கிறிஸ்துவ நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

ஒரே பாலினத்தை சேர்ந்த இரு பெண்ணும், இரு ஆண்ணும் காதலித்து ஒன்றாக திருமணம் செய்துகொள்வது வெளிநாடுகளில் பல இடங்களில் அவ்வப்போது நடந்து வந்தது. இது தற்போது இந்திய அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் ஓரின சேர்க்கை திருமணம் வடமாநிலங்களில் ஒரு சில இடங்களில் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு இந்த ஓரின சேர்க்கை திருமணம் கேரளாவில் நடந்திருக்கிறது என குறிப்பிடப்படுகிறது. அதனை சிலர் எதிர்ப்பு தெரிவித்தும், சிலர் எனக்கென என்று கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.

இரண்டு ஆண்களுக்கும் திருமணம்.! வைரலாகும் கேரள ஓரினசேர்க்கையாளர்கள் புகைப்படம்.!

இந்நிலையில், அதுபோன்று தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மேகன் வால்டிங் 25 வயதும், மற்றும் சாஷா-லீ ஹீக்ஸ் 24 வயதும் உடைய ஓர்பால் ஈர்ப்பாளர்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். திருமண மண்டபத்துக்காக அதன் உரிமையாளரை அணுகியுள்ளனர். ஆனால், மண்டபத்தின் உரிமையாளர் ஓர்பால் ஈர்ப்பாளர்கள் என்பதற்காக திருமண மண்டபத்தை தர மறுத்துள்ளார். அதற்கு காரணமாக, ஓர்பால் ஈர்ப்புத் திருமணம் கிறிஸ்துவ நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள மேகன் வால்டிங் வால்டிங்கின் பதிவில், நான் காயப்படுத்தப்பட்டதை நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்கள். உங்களுடைய இந்த செயல்களால் நான் எவ்வளவு வேதனையடைந்திருப்பேன். அடுத்த ஆண்டுக்குள் நாங்கள் விரும்பும்படி திருமண மண்டபம் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆப்பிரிக்கா கண்டத்திலேயே தென்ஆப்பிரிக்காவில் மட்டும்தான் ஓர்பால் ஈர்ப்புத் திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்ஆப்பிரிக்க மனித உரிமைகள் ஆணையம், திருமண மண்டபத்தின் உரிமையாளரின் செயல் பாகுபாடு நிறைந்தது என்று தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

1 hour ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

2 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

4 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

5 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

6 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

7 hours ago