பாகிஸ்தானில் தீ வைத்து, இடித்து இந்து கோயில் தகர்ப்பு..!

Published by
murugan

இந்த நேரத்தில் உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளது. ஆனால், புதிய ஆண்டுக்கு முன் பாகிஸ்தானில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாகிஸ்தானில் இந்துக்களின் ஒரு கோயில் உடைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது.

இந்த சம்பவம் காரணமாக, மக்களிடையே அதிருப்தி அதிகரித்து உள்ளது. இது குறித்த வீடியோவும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சொந்த மாநிலமாக கூறப்படும் கைபர் பக்துன்க்வாவின் கரக் மாவட்டத்தில் நேற்று ஒரு குழு இந்து கோவிலை உடைத்து பின்னர் எரித்தனர் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் நடத்தியதாகவும், எல்லாவற்றையும் பார்த்த பிறகும் காவல்துறையும், நிர்வாகமும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கைபர் பக்துன்க்வா முதல்வர் மஹ்மூத் கான் கூறுகையில், இந்த தாக்குதலை “ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்” என்று குறிப்பிட்டார். சட்டத்தை கையில் எடுத்த அனைத்து மக்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

லண்டனை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆர்வலர் ஷமா ஜுன்ஜோ இந்த வீடியோவைப் பகிர்ந்தார். அதில், பாகிஸ்தான் நடந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவத்தை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

3 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

4 hours ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

5 hours ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : டிக்கெட் வாங்கிவிட்டீர்களா? ஐசிசி கொடுத்த முக்கிய அப்டேட்!

துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…

5 hours ago

பிப் 5 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! ஓய்ந்தது பரப்புரை!

ஈரோடு :  கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…

5 hours ago

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை., தொடர் தாக்குதல்., கனிமொழி கடும் விமர்சனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…

6 hours ago