குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் சுரேந்திரன் மனைவி புதிய மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் சென்னை காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு.
கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்த புகாரில் கைது செய்யப்பட்ட சுரேந்திரன், செந்தில்வாகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். இவர்களின் சுரேந்தனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை ரத்த செய்ய கோரி சுரேந்தரின் மனைவி கிருத்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவக்கூடிய மூடநம்பிக்கைகள் மற்றும் கல்வியறிவு இல்லை, அறியாமையை ஒழிப்பதற்காவும் பல்வேறு தகவல்களை வெளியிட்ட தனது கணவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருப்பதாகவும், அது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று மனுவில் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்திருக்கக்கூடிய நிலையில், குண்டர் சட்டத்தை பயன்படுத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மனுவானது நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கும், சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு விசாணையை தள்ளி வைத்தனர்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…