பொதுக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்டபின் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குமரகுருவிற்கு முன்ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்..!

Published by
லீனா

கடந்த மாதம் 19-ஆம் தேதி, கள்ளக்குறிச்சி மந்தவெளி பகுதியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு, முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசி இருந்தார். இவரது பேச்சுக்கு திமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதைக் கண்டித்து, திமுக சார்பில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு, அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, மாவட்ட செயலாளர் குமரகுரு அவர்கள், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முறையாக அனுமதி பெற்று, மீண்டும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி, அக்கூட்டத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு அவர்கள், கள்ளக்குறிச்சி மந்தவெளியில் நேற்று பொதுக்கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து நான் அவதூறாக பேசியதற்கு சமூக வலைத்தளம் வாயிலாக மன்னிப்பு கோரியிருந்தேன். நான் பேசிய பேச்சு புண்படும்படி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக பகிரங்கமாக மன்னிப்பு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதற்காக பொது கூட்டம் நடத்தி மன்னிப்பு கேட்ட, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குமரகுருவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

8 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

9 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

9 hours ago