வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள டேனி படத்தினை ஆகஸ்ட் 1ல் Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக சினிமாத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ்க்கு தயாராக இருந்த பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘ பெங்குயின்’ ஆகிய படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமின்றி காயத்ரி ரகுராம் அவர்களின் ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படமும் Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘டேனி’ என்ற படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவதாக கூறப்பட்டது
வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’ என்ற படத்தை அறிமுக இயக்குனரான சத்யமூர்த்தி இயக்குகிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, வேலு ராமமூர்த்தி முக்கிய வேடங்களிலும் மற்றும் ஒரு நாயும் நடித்துள்ளது.
போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள இந்தப் படம் நாய் அணியில் உள்ள நாய்க்கும், போலீஸாக நடிக்கும் வரலட்சுமிக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகள் தான் கதை. இந்த படத்தை ஓடிடி பிளாட்பாரமான Zee5 தளத்தில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி Zee5 தளத்தில் வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…