செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ‘இன்ஜெனியூட்டி ஹெலிஹாப்டர்’…!மனித வரலாற்றின் மிகப்பெரிய சாதனை..!

Published by
Edison

மனித வரலாற்றிலேயே முதல்முறையாக செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக பறக்க விட்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சாதனைப் படைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா? அல்லது மனிதர்கள் வாழும் சூழ்நிலைகள் இருக்கிறதா என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது மனித குலத்தின் மிகப்பெரிய கனவாக இருந்தது.

இந்த நிலையில்,கடந்த  ஆண்டு ஜூலை மாதம் நாசா அனுப்பிய பெர்சிவெரென்ஸ் ரோவர் என்ற விண்கலம் 7 மாதங்களில் 292 மில்லியன் கிலோமீட்டர் பயணித்து பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசொரா பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக தரையிறங்கியது.இந்த முயற்சியில் ஈடுபட்ட பெர்சிவெரென்ஸ் வழிநடத்துக் குழுவின் தலைவராக பணியாற்றிய இந்திய வம்சாவளியை சேர்ந்த சுவாதி மோகனுக்கு உலக அளவில் பாராட்டுக்கள் குவிந்தன.

தரையிறங்கிய சில நாட்களுக்குப் பிறகு பெர்சிவெரென்ஸ் ரோவர் எடுத்த செவ்வாயின் புகைப்படங்களை வெளியிட்டது நாசா. மேலும், பெர்சிவெரென்ஸ் இரண்டு ஆண்டுகள் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகள்,மணற்பாங்கான இடங்களில் துளையிட்டு அதனை சேகரித்துகொண்டு,2030 ஆம் ஆண்டு பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.ஆனால்,இந்த முயற்சி கடந்த வாரம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தடைபட்டது.அதன் பிறகு அக்கோளாறு சரி செய்யப்பட்டது.

இந்த நிலையில்,ரோவருடன் இணைத்து அனுப்பப்பட்ட ‘இன்ஜெனியூட்டி’ என்ற 1.8 கிலோ எடை கொண்ட சிறிய அளவிலான அதிநவீன ஹெலிகாப்டரை செவ்வாயில் பறக்க விடும் முயற்சியில் தற்போது நாசா ஈடுபட்டுள்ளது. அதன்படி,தற்போது செவ்வாய் கிரகத்தில் 30 வினாடிகள் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக பறக்கவிட்டது.இதன்மூலம், பூமியை தவிர வேறொரு கிரகத்தில் முதன் முதலாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.

 

 

Published by
Edison

Recent Posts

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

4 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

5 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

7 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

7 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

10 hours ago