பாகிஸ்தானில் கனமழை காரணமாக 24 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று பெய்த கனமழை காரணமாக 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கூரை இடிந்து விழுந்த சம்பவங்களால் பல வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்து, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களுக்கு தகவல் கூறப்பட்டுள்ளது.
லாகூரின் ஹர்பன்ஸ்புரா பகுதியில் ஒரு பழைய வீட்டின் கூரை இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்து, 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஷேகுபுரா மாவட்டத்தில் ஒரு வீட்டின் கூரை இடிந்து விழுந்தபோது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர், அதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மண்டி பஹாவுதீன் மாவட்டத்தில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் தாய் உள்ளிட்ட 4 குழந்தைகளும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். சக்வால் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் மூன்று தொழிலாளர்கள் நசுக்கப்பட்டனர்.
மேலும், பைசலாபாத் மாவட்டத்தில் மின்சாரம் மற்றும் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த வார தொடக்கத்தில், பாகிஸ்தான் வானிலை ஆய்வு துறை புதன்கிழமை முதல் வலுவான பருவமழை நீடிக்கும் என்று கூறியது, இது அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களில் அந்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்றும் கனமழை பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களிலும் வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…