ஆப்கானிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 70 பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை ஆப்கானிஸ்தானில் கோடை காலமாக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் கோடை மழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருமளவில் பெய்வதுண்டு. அதன்படி ஆண்டுதோறும் அங்கு அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிலர் உயிரிழக்கவும் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தொடங்கி ஆப்கானிஸ்தானில் இடைவிடாத கனமழை பெய்துள்ளது. இதனால் முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்து உள்ளதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடி உள்ளது. இந்த வெள்ளத்தில் 300 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த வெள்ளத்தில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பலர் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலர் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது எனவும் அஞ்சப்படுகிறது. இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கான மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…