பிரான்சில் மீண்டும் சுகாதார அவசரநிலை பிரகடனபடுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸானது, மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து, அங்கு மீண்டும் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வசதியாக அவசரநிலை தேவைப்படுவதாக கூறியுள்ளார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொலைக்காட்சி வாயிலாக மக்களுடன் உரையாற்றிய எம்மானுவேல் மேக்ரோன், சனிக்கிழமை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், ஊரடங்கின் போது மக்கள் உணவகங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், ஆனால், பொது போக்குவரத்திற்கு தடை இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரான்சில் இதற்குமுன் மார்ச் மாதம் அவசரநிலை பிரகடப்படுத்தப்பட்டு, ஜூலை மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…