இன்றைய தலைப்புச் செய்திகள்.! வெளியூர் முதல் உள்ளூர் வரை.!

Default Image

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது. 

  • உலகளவில் கொரோனா வைரசால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,085,666 பேர் ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 329,736 பேர் ஆகவும் உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைத்தவர்கள் எண்ணிக்கை 2,021,673 ஆக அதிகரித்துள்ளது. மேலும் படிக்க.. 
  • இந்தியாவில் 112,028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,434 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸில் இருந்து 45,422 பேர் குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர். மேலும் படிக்க..
  • உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கும் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தகவல். மேலும் படிக்க..
  • நேற்று மாலை கரையை கடந்த அம்பன் புயலால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ள  நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த புயலால் இதுவரை 10-12 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..
  • ஜூன் 1 ஆம் தேதி முதல் 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த ரயில்களுக்கான அட்டவணையை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு ரயில் சேவை இடம்பெறவில்லை. மேலும் படிக்க..
  • சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 1,538 பேர் கொரோனாவால் பாதிப்பு கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,192 ஆக உயர்வு. திரு.வி.க. நகரில் 976ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
  • அந்தந்த பள்ளிகளிலேயே 10 மற்றும் 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல். ஜூலை மாத இறுதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
  • புதுச்சேரி – காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம். கடலூர், நாகையில் பயணிகள் ஏறவோ, இறங்கவோ அனுமதி மறுப்பு.
  • அமெரிக்க நடிகர்களை விட மேன்மையான திறமையான நடிகர் கமல்ஹாசன் என ஹாலிவுட் நடிகை மெக்கன்சி வெஸ்ட்மோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது தந்தையுடன் சிறு வயதில் கமலை பார்த்து பிரமித்து போனதாக தெரிவித்துள்ளார்.
  • கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்தாமல் இருக்க பயிற்சி எடுக்க வேண்டும் என இந்திய அணியின் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
  • மதுரை மாநகராட்சி பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு  அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று, மட்டும் மதுரையில் முகக்கவசம் அணியாத 500 பேருக்கு ரூ.59,800 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் படிக்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்