ராணா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணிடம் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு, அந்த பெண் எனக்கு யெஸ் சொல்லி விட்டார் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்றது பாகுபலி திரைப்படம். எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015ல் பாகுபலி படத்தின் முதல் பாகமும், 2017ல் பாகுபலி இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் மிகப் பெரும் வசூல் ரீதியாகவும் சாதனையை படைத்தது. இதில் முக்கிய வேடங்களில் பிரபாஸ், ராணா டக்குபதி , சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாகுபலியின் இரண்டு பாகத்திலும் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராணா டக்குபதி. அவர் அதனையடுத்து ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில காலமாக ராணா தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் ராணா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணிடம் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு, அந்த பெண் எனக்கு யெஸ் சொல்லி விட்டார் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். அந்த பெண் ஹைதராபாத்தில் உள்ள டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோவின் நிறுவனரான மிஹீகா பஜான் என்பவராவர். இந்த நிலையில் ராணாவின் அப்பாவும், தயாரிப் பாளருமான சுரேஷ் பாபு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராணா மற்றும் மிஹீகா இருவரும் காதல் செய்வதாகவும், இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், இந்த வருடம் திருமணம் நடக்க கூடும் என்றும் கூறியுள்ளார். மேலும் திருமணம் குறித்த கூடுதல் தகவல்கள் சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது பல பிரபலங்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…