எனது மகளை அடித்து கொலை செய்துவிட்டான் .! சித்ராவின் கணவர் மீது தாயார் குற்றச்சாட்டு.!

Published by
Ragi

எனது மகளை அவரது கணவர் ஹேமந்த் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி சித்ராவின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார் .

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து போலீசார் சித்ராவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ராவின் கணவர், பெற்றோர்கள் மற்றும் சக நடிகர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .இந்த நிலையில் சித்ராவின் தாயார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, எனது மகளை அவளது கணவர் அடித்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டியதுடன் எனது மகளை கொன்றதற்காக அவளது கணவன் மீது புகார் அளிப்பேன் என்றும் கூறியுள்ளார் . அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை என்றும், பதிவு திருமணம் நடந்தது உண்மைதான் எனவும் , ஹேமந்தை நம்பி தான் எனது மகளை ஒப்படைத்ததாகவும் ,அவளை அவரே அடித்து சாகடித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.அதனுடன் சித்ராவிற்கு ஹேமந்துடன் பிப்ரவரி 10-ம் தேதி ஊரறிய திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தற்போது சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது .அவரது இறுதி சடங்குகள் கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…

28 minutes ago

“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…

44 minutes ago

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…

1 hour ago

தமிழ்நாடு போலீசுக்கு நாங்க என்னென்ன செய்திருக்கோம் தெரியுமா? முதலமைச்சர் போட்ட பட்டியல்…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…

1 hour ago

அடிக்குற வெயிலுக்கு மழை அப்டேட்.! இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…

2 hours ago

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகம், வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…

2 hours ago