இந்தியாவில் இருந்து விலகிய ஹார்லி டேவிட்சன் நிறுவனம், அடுத்தாண்டு ஜனவரி முதல் மீண்டும் இந்தியாவில் தங்களின் விற்பனையை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகளவில் பிரபலமான அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்தியாவில் அதிகளவில் வரவேற்கப்பட்டது. குறிப்பாக, பல மீடில் க்ளாஸ் பசங்களுக்கு அது ஒரு கனவாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஹார்லி டேவிட்சன், இந்தியாவை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்தது.
அதற்கு காரணம், எதிர்பாராத அளவு விற்பனை இல்லாதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனையடுத்து, ஹரியானாவில் செயல்பட்டு வந்த தயாரிப்பு ஆலையும் மூடப்பட்டுள்ளது. இது டீலர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது மட்டுமின்றி, ஹார்லி டேவிட்சன் பைக்குகளை வாங்கிய உரிமையாளர்களுக்கு பெரும் சிரமமாய் அமைந்தது. குறிப்பாக சர்விஸ் செய்வது, உதிரிபாகங்கள் கிடைப்பதில் பெருமளவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹார்லி டேவிட்ஸன், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மீண்டும் தங்களின் பைக்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிக்கையை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வரும் ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது. மேலும், தங்களின் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி மற்றும் ஹார்லி உரிமையாளர் குழுக்களுக்கான செயல்பாடுகளை அடுத்தாண்டு ஜனவரி முதல் தொடங்கும் என்றும் எந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…