ஹேப்பி நியூஸ்: இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு ரத்து! – உக்ரைன்

தேர்வு இல்லாமலேயே இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு, MBBS பட்டம் வழங்க உக்ரைன் அரசு முடிவு.
லைசன்ஸ் தேர்வு ரத்து:
உக்ரைனில் மருத்துவம் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு லைசன்ஸ் தேர்வு எனப்படும் இறுதித் தேர்வை நடத்தாமலேயே எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ் வழங்க அந்நாடு முடிவு செய்துள்ளது. மருத்துவம் படித்த ஐந்தாவது ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு லைசன்ஸ் மற்றும் KROK தேர்வு ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
MBBS பட்டம்:
மருத்துவ படிப்பில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான KROK-1 தேர்வை ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டதாக உக்ரைன் பல்கலைகழகங்கள் தெரிவித்துள்ளது. 5-ஆம் ஆண்டு மாணவர்களுக்கான KROK-2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. போர் சூழல் காரணமாக லைசன்ஸ் தேர்வு எழுதாமலேயே மருத்துவ படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் (MBBS பட்டம்) வழங்கப்படும்.
மாணவர்கள் நிம்மதி:
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள், அவர்களது சொந்த நாட்டிற்கு திரும்பிய நிலையில், இந்த அறிவிப்பு சற்று நிம்மதியை தருவதாக மாணவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேர்வு ரத்து குறித்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு உக்ரைன் நாட்டு பல்கலைக்கழகங்கள் தகவல் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025