மாஸ்டர் படத்தை தனது சொந்த ஊரில் பார்த்து ரசித்ததாகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் ஈஸ்வரன் படத்தை இயக்கியுள்ள சுசீந்திரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் ஈஸ்வரன் படத்தை இயக்கிய சுசீந்திரன் அவர்கள் விஜய்யின் மாஸ்டர் படத்தை குறித்து தற்போது பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் மகிழ்ச்சியாக உள்ளது எனவும், மாஸ்டர் படத்தை தனது சொந்த ஊரில் உள்ள ஒரு தியேட்டரில் பார்த்து ரசித்ததாகவும், மாஸ்டர் படம் விஜய்யின் துப்பாக்கி படத்துக்கு பிறகு அவருக்கு மாஸ்டர் பீஸாக அமைந்துள்ளதாகவும் பிரமாதமான நடிப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இது போன்ற ஒரு கதையை விஜய்க்கு கொடுத்த லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு நன்றி எனவும் திரைக்கதை தொடங்கி நடிகர்கள் நடிகைகள் வரை சரியாக தேர்வு செய்திருக்கிறார் எனவும், மேலும் விஜய் சேதுபதியின் வில்லத்தனத்தை ரசிக்கும்படி செய்திருப்பதாகவும், பொங்கலுக்கு ஒரு வெற்றி படமாக இந்த படம் அமைந்திருப்பதாகவும் படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…