அரை நூற்றாண்டுக்கு பின் கொரோனா அச்சத்தால் ரத்து செய்யப்பட்ட நோபல் விருந்து.!

Published by
Ragi

கொரோனா அச்சத்தால் அரை நூற்றாண்டுக்கு பின்னர் முதல் முறையாக நோபல் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

விஞ்ஞானம், இலக்கியம் ஆகியவற்றின் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருது தான் நோபல் பரிசு. 1901-முதல் ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான ஆல்பர்ட் நோபல் அவர்களால் உருவாக்கப்பட்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 2020-ம் ஆண்டின் நோபல் பரிசுக்கான விருந்து ரத்து செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை செவ்வாயன்று ஸ்வீடிஷ் நாளேடான டேஜென்ஸ் நைஹெட்டர் தெரிவித்துள்ளது.

2020-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை வென்றவர்களை அறிவித்த பின்னர், அவர்களுக்கான விருந்து ஒன்று நடைபெறும். பொதுவாக டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் இந்த விருந்தில் சுமார் 1,300 பேர் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஒருவருக்கொருவர் உட்கார்ந்து பேச இயலாது மற்றும் ஸ்வீடன் வரை பயணிக்க முடியுமா..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது என நோபல் அறக்கட்டளையின் தலைவர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன் டேகன்ஸ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடைசியாக இந்த விருந்து 1956-ல் சோவியத் யூனியன் ஹங்கேரி மீது படையெடுப்பதை எதிர்த்து ரத்து செய்யப்பட்டது. அடுத்ததாக இரண்டு உலகப் போரின் போதும் கைவிடப்பட்டது. தற்போது அரை நூற்றாண்டுக்கு பின்னர் முதல் முறையாக கொரோனா அச்சத்தால் நோபல் விருந்து ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Published by
Ragi

Recent Posts

மத்திய அமெரிக்காவில் கோர விபத்து! பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து., 55 பேர் பலி!

மத்திய அமெரிக்காவில் கோர விபத்து! பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து., 55 பேர் பலி!

குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…

19 minutes ago

பும்ரா வெளியே., வருண் உள்ளே! ஜெய்ஸ்வாலுக்கு ‘ஷாக்’! சாம்பியன்ஸ் டிராபி ‘புது’ அப்டேட் இதோ…

மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…

51 minutes ago

செங்கோட்டையன் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு! என்ன நடக்கிறது அதிமுகவில்?

கோவை : அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில்…

2 hours ago

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

12 hours ago

பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!

மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…

13 hours ago

க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!

சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…

13 hours ago