ஜப்பானின் ககோஷிமா மற்றும் ஒக்கினாவா நகரங்களுக்கு இடையே மையம் கொண்டுள்ள “ஹைஷென் புயல்” தெற்கு ஜப்பானில் கடந்த சென்ற பிறகுபோக்குவரத்து முடங்கியது. புல்லட் ரயில்கள் நிறுத்தப்பட்டன, பெரும்பாலான உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 10 விமான நிலையங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இன்று அல்லது நாளை ஜப்பானில் கியுஷு தீவை டைபூன் “ஹைஷென் புயல்” கடக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால், ஜப்பானில் சுமார் எட்டு மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த புயல் காரணமாக, 22 ஆயிரம் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று புயலின் வேகம் மணிக்கு 252 கிமீ (157 மைல்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புயலை சுனாமியுடன் ஒப்பிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் உருவான “மேசக் “புயலால் ஜப்பான் மற்றும் கொரிய தீபகற்பத்தில் வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களை சேதப்படுத்தியது. மேசக் புயல் கடந்து செல்லும்போது ஒரு கால்நடை சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து மூழ்கியது.
இந்த கப்பலில் பயணம் செய்த 43 பணியாளர்களில் இருவர் மீட்கப்பட்டனர் மற்றும் ஒரு உடல் மீட்கப்பட்டது. இந்த கப்பல் நியூசிலாந்திலிருந்து 5,800 மாடுகளை சீனாவுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…