சமூக வலைதளங்களில் அவ்வபோது ஹேக்கர்கள் ஹேக் செய்வது நடைபெற்று வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் அமெரிக்க பிரபலங்களின் டிவிட்டரில் நுழைந்த ஹேக்கர்கள் மோசடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்ட 130 கணக்குகளில் 45 கணக்குகள் எலோன் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரின் கணக்குகளில் இருந்து குறிப்பிட்ட பிட்காயின் அட்ரஸுக்கு உடனடியாகப் பணம் அனுப்பினால் அது இரட்டிப்பாகி உங்களுக்கு திரும்பிவரும் எனப் பதிவிடப்பட்டது. 45 ட்விட்டர் கணக்குகளில், பாஸ்வேர்ட் ரீசெட் செய்யப்பட்டு, லாக் இன் செய்து ட்வீட்கள் பதிவு செய்யப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஹேக் செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு ட்விட்டர் இதுகுறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளது. அதில் சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்களின் தொலைபேசி மற்றும் ஜி மெயில் மூலம் இந்த தாக்குதலை ஹேக்கர்கள் செய்ததாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. மேலும், ஹேக்கர்கள் எங்கள் உள் அமைப்புகளை அணுகவும், எங்கள் செயல்முறைகள் பற்றிய தகவல்களைப் பெறவும் தாக்குதல் பயன்படுத்தினர் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.
இந்த உலகில் எந்த அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்து வருகிறதோ அதே அளவிற்கு ஆபத்தும் உள்ளது. பொதுவாக நம்முடைய தொலைபேசியில் நமக்கு தெரியாமல் சில ஆப் இருந்தால் அதை உடனடியாக நீக்க வேண்டும் இதன் மூலமும் ஹேக்கர்கள் நம்முடைய தகவல்களை திருடிவிடுவார்கள். மேலும், உங்களுகளை தொடர்பு கொண்டு வங்கி கணக்கின் தகவல்களை கேட்டால் உடனடியாக தகவலை கொடுக்காமல் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் கொடுக்கவேண்டும்.
மேலும், உங்கள் ஜி மெயிலில் உங்களுக்கு தெரியாதவர்கள் அனுப்பிய தகவலை திறந்து பார்க்காமல் அதை நீக்க வேண்டும். அப்படி அவர்கள் அனுப்பிய தகவலை திறந்து பார்க்கும்போது உங்களுடைய தகவல்களை ஹேக்கர்கள் திருடி விடுவார்கள்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…