ஹேக்கர்கள் கைவரிசை.. ரூ.7,400 முதல் முன்னணி நிறுவனங்களின் CEO, CFO, CMO-ன் இ-மெயில் பாஸ்வேர்டு விற்பனை!

Published by
Surya

பல முன்னணி நிறுவனங்களின் CEO, CFO மற்றும் CMO உள்ளிட்டோரின் மைக்ரோஃசாப்ட் இ மெயில் ஐடியை பாஸ்வேர்டுடன் $100-$1,500 (இந்திய மதிப்பின்படி ரூ.7,400 முதல் ரூ.1.1 லட்சம்) வரை ஹேக்கர் ஒருவர் விற்பனை செய்துள்ளது, பலரை அதிர்ச்சிக்குளாகியது.

உலகளவில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களின் CEO, CFO மற்றும் CMO உள்ளிட்டோரின் மைக்ரோஃசாப்ட் இ மெயில் ஐடியை பாஸ்வேர்டுடன் டார்க் வெப்பில்ஹேக்கர் ஒருவர் ரூ.7,400 முதல் ரூ.1.1 லட்சம் வரை விற்பனை செய்து வருகிறார். இதுதொடர்பாக ZDNet நிறுவனம், ஆய்வுகள் மேற்கொண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் வெளியான தகவலின்படி, பல முன்னணி நிறுவனங்களின் CEO, CFO மற்றும் CMO ஆகியோரின் ஆஃபிஸ் 365 மற்றும் மைக்ரோசாஃப்ட் இ-மெயில் முகவரிகளை ஹேக்கர்கள் திருடி, அந்த நிறுவனத்தின் மதிப்பு மற்றும் அதில் உள்ள தகவல்களுக்காக மதிப்புகள் ஆகியவற்றுக்கு ஏற்ப ஒரு விலையை நிர்ணயித்து, ரஷிய மொழியில் இயங்கும் வலைத்தளமான exploit.in வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் CEO, CFO, CMO உள்ளிட்டவர்களையும் தவிர்த்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வேலைப் பார்க்கும் மேனேஜர், முக்கியமான ஊழியர்கள், தொழில்நுட்ப பிரிவில் வேலைபார்க்கும் ஊழியர்கள் ஆகியோரின் இ மெயில் ஐடியும் திருடப்படும் காரணத்தினால், அந்த நிறுவனத்தின் CEO முதல் வேலைபார்க்கும் ஊழியர்கள் வரை அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுபோல இ-மெயில்களை ஹேக் செய்து விற்பனை செய்பவர், தன்னிடம் இதுபோன்று நூற்றுக்கணக்கான இ-மெயில்களின் பாஸ்வர்டு இருப்பதாக கூறினார். அதுமட்டுமின்றி, எப்படி கிடைத்தது என்பது குறித்து விளக்க மறுத்து விட்டார். தற்பொழுது மிகப்பெரிய நிறுவனங்களின் செயலதிகாரிகளின் இ-மெயிலில் உள்ள தகவல்கள், பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும், இது பாலுக்கு காவல் பூனை போல இருக்கின்றது.

Published by
Surya

Recent Posts

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

35 minutes ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

13 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

14 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

15 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

15 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

16 hours ago