எச்1-பி விசா தடை.. சுந்தர் பிச்சை அதிருப்தி!

Published by
Surya

அமெரிக்காவில் எச்-1 பி விசா, இந்த ஆண்டு இறுதிவரை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர்  டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், விசா தடை குறித்து அதிருப்தி அளிப்பதாக கூகுள்  சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி இருந்து வேலை செய்வதற்காக பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகமாக பெற்று வருகின்றனர். இந்த விசா வைத்துள்ள ஒருவர், 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் இருக்க முடியும். அதன் பின் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்பது சட்டமாக உள்ளது.

இதைத்தொடந்து, கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் வேலை இழப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக எச்-1 பி விசா பற்றிய விதிமுறைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக்கி உள்ளார்.  இதனால், வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் எச்-1 பி விசா, இந்த ஆண்டு இறுதிவரை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர்  டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவால் அமெரிக்காவில் உள்ள 5 லட்சம் பேருக்கு வேலைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், டிரம்பின் இந்த நடவடிக்கை குறித்து கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்ததாவது, அமெரிக்க நாட்டின் பொருளாதாரம் உலகளவில் சிறந்து விளங்குவதற்கு வெளிநாட்டில் இருந்து பங்களிப்பே அதிகம். வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வரும் நபர்களை தடுக்கும் வகையில், எச்-1 பி விசாக்களை தடை செய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்ட நிலையில், அதற்க்கு அதிருப்தி தெரிவிப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு தனது ஆதரவு தொடரும் எனவும், அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

“தென்தமிழகத்தை நோக்கி மிதமான மழை பெய்யக்கூடும்” – வானிலை ஆய்வு மையம்.!

“தென்தமிழகத்தை நோக்கி மிதமான மழை பெய்யக்கூடும்” – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

14 minutes ago

நேருக்கு நேராக சிங்கத்தை பார்த்த பிரதமர் மோடி! சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு!

குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…

1 hour ago

“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…

1 hour ago

ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!

நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…

2 hours ago

12ஆம் வகுப்பு தேர்வு : பறக்கும் படை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்.., பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…

3 hours ago

கேட்ச் விட்டாச்சு..பீல்ட்டிங் சரியில்லை! கேஎல் ராகுலால் அப்செட்டில் ரசிகர்கள்!

துபாய் :  சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியில் கீப்பராக எந்த வீரர் விளையாடப்போகிறார் என்கிற கேள்விகள்…

3 hours ago