கௌதம் மேனன் இயக்கத்தில் ராணுவ அதிகாரியாக அனுஷ்கா?!
- கௌதம் மேனன் இயக்கத்தில் அனுஷ்கா புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
- வேல்ஸ் பட நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தில் அனுஷ்கா ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட வருடமாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் படங்கள் வெளியாகாமல் இருந்தது. கடைசியாக எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியானது. அதற்கு அடுத்ததாக வருண் நடித்து வரும் ஜோஸ்வா இமைபோல் காக்க படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இப்படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளது. மீண்டும் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை கெளதம் மேனன் இயக்க உள்ளார்.
இப்படத்தில் அனுஷ்கா முன்னணி வேடத்தில் நடிக்க உள்ளாராம். இப்படம் ராணுவம் சம்பந்தப்பட்ட ஆக்சன் படமாக உருவாக உள்ளதாம். இப்படத்திற்கு குருதிப்புனல் படத்திற்கு கதை எழுதிய கதாசிரியர் தான் கதை எழுதியுள்ளாராம். இப்பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.