அமெரிக்க நகரின் வெவ்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு.! 18 பேர் காயம்.! 4 பேர் பலி.!

Published by
மணிகண்டன்

அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி நகரை சுற்றி பல்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 18 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி  காவல்துறையினர் கூறுகையில், ‘ நாங்கள் முதல் நபரை அவொண்டேல் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க அன்டோனியோ பிளேர் எனும் நபரை துப்பாக்கி காயங்களுடன் கண்டறிந்தோம்’ எனவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாகவும் கூறினார்.

மேலும், ஓவர்-தி-ரைன் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 10 பேர் சுடப்பட்டனர் எனவும், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் சின்சினாட்டி பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், ஒருவர் ஞாயிற்று கிழமை அதிகாலை நகரின் மேற்கு பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இறந்துள்ளார்.

  இதுகுறித்து, அப்பகுதி மேயர் ஜான் கிரான்லி கூறுகையில், ‘ கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பார்கள் அடைக்கப்பட்டு இருப்பதால், சட்ட விரோதமாக மக்கள் ஒரு பகுதியில் கூடி மது, புகையிலை போன்றவற்றை பயன்படுவதாகவும், அப்போது துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதாகவும், அதனால் தான் உயிரிப்புகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், பொதுமக்கள் யாரும் சட்டவிரோத மது விருந்தில் கலந்துகொள்ள வேண்டாம். அப்படி கலந்துகொண்டால், நீங்களும் உயிரிழக்கும் அப்பாவி மக்களாய் இருப்பீர்கள்’ என கூறியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

3 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

3 hours ago