இந்தியாவில் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க துணை நிற்பதாக கிரெட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிறுமி கிரெட்டா துன்பெர்க் மக்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்.
ஐ.நா.வில் காலநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டின் போது காலநிலை மாற்றம் தொடர்பாக உலக தலைவர்களை கடுமையாக சிறுமி கிரெட்டா விமர்சித்து பேசினார். சிறுமியின் பேச்சுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப். சிறுமியின் பேச்சை விமர்சனம் செய்தார். அவரின் அந்த செயல், மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் சிறுமி கிரெட்டா துன்பெர்க், கொரோனா பரவும் சூழலில், இந்தியாவில் நீட் தேர்வுகள் ஒத்திவைப்பதற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர், கொரோனா பரவலின் போது, இந்திய மாணவர்களை தேசியத் தேர்வுகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவது மிகவும் நியாயமற்றது என தெரிவித்தார்.
அதே நேரத்தில் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா பரவும் சூழலில் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளை ஒத்திவைக்க அவர்களின் அழைப்போடு நான் துணைநிற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…