கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவில் ஜனவரி மாதம் நடைபெறவிருந்த கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கக்கூடிய கலைஞர்களுக்கு கிராமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறக்கூடிய இந்த விழாவில் இசைத் துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதே போல இந்த ஆண்டும் ஜனவரி 31ஆம் தேதி கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி ஜனவரி மாதம் நடைபெறவிருந்த இந்த கிராமிய நிகழ்ச்சி மார்ச் 14-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…