அந்த செய்தி முற்றிலும் வதந்தி – கௌதம் வாசுதேவ மேனன் ஓபன் டாக்!

Published by
மணிகண்டன்
  • கௌதம் வாசுதேவ் மேனன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு கதை கூறியுள்ளார் என தகவல் பரவி வந்தது.
  • இந்த தகவலை கௌதம் வாசுதேவ் மேனன் மறுத்துள்ளார். அவருக்கான கதை ரெடி. ஆனால், அதனை இன்னும் அவரிடம் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடமாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது மீண்டும் பட இயக்கத்தில் பிஸியாக உள்ளார். அவரது இயக்கத்தில் கடைசியாக எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் ஆகியிருந்தது. அதனை தொடர்ந்து ஜோஸ்வா எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை அடுத்து விக்ரம் நடிப்பில் தயாராகி வந்த துருவநட்சத்திரம் படத்தின் இறுதிகட்ட பணிகளை மேற்கொள்வார் என கூறப்படுகிறது. இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கௌதம் வாசுதேவ் மேனன் கதை கூறியுள்ளார் என தகவல் வெளியாகி வந்தது.

இந்த தகவல் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், ‘ நான் ஏற்கனவே ரஜினியிடம் கதை கூறி இருந்தேன். அது கபாலி படத்திற்கு முன்னதாக தான். ஆனால் அதற்கடுத்ததாக அவரிடம் நான் எந்த கதையும் கூறவில்லை. அவருக்கான கதை ஒன்று எழுதி வைத்துள்ளேன். அதை அவரிடம் கூற சந்தர்ப்பம் கிடைத்தால் கூறுவேன். ஆனால், நான் ஏற்கனவே கதை கூறிவிட்டதாக வரும் செய்திகள் வதந்தி என கூறியுள்ளார்.

மேலும், நான் சூர்யாவிற்கு தற்போது கதை எழுதி வருகிறேன். விரைவில், அதனை அவரிடம் கூறி அவருக்கு பிடித்திருந்தால் சூர்யாவை விரைவில் இயக்குவேன்.’ என  அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

34 minutes ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

1 hour ago

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…

2 hours ago

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

2 hours ago

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

3 hours ago

MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?

மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…

3 hours ago