கோத்தபய ராஜபக்சே எங்கும் ஓடி ஒளியவில்லை… இலங்கை அமைச்சரவை வெளிட்ட புதிய தகவல்..
கோத்தபய ராஜபக்சே எங்கும் ஓடி ஒளியவில்லை. விரைவில் அவர் இலங்கை திரும்புவார் – இலங்கை அமைச்சரவை செய்தி தொடர்பாளர் தகவல்.
இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்தது. அதன் காரணமாக பிரதமர், அதிபர் என அரசியல் தலைவர்கள் மக்கள் கண்ணில் படாமல் பாதுகாப்பாக இருந்தனர்.
அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினமா செய்யாமலே மாலத்தீவு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுவிட்டார் என கூறப்பட்டது. அங்கிருந்து தான் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் தற்போது ரணில் விக்ரமசிங்கே புதிய அதிபராக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மீண்டும் ராஜபக்சே நாடு திரும்புவரா என பல்வேறு தரப்பில் இருந்து கேள்வி எழுந்தது.
இதற்கு இலங்கை அமைச்சரவை செய்தி தொடர்பாளர் பதில் கூறியுள்ளார். அதாவது, கோத்தபய ராஜபக்சே எங்கும் ஓடி ஒளியவில்லை. விரைவில் அவர் இலங்கை திரும்புவார் என கூறியுள்ளார்.