இனி ஒரே நேரத்தில் 100 பேர் வரை வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசலாம்… கூகுல் நிறுவனத்தின் புதிய இலவச சேவை…

Published by
Kaliraj

கூகிள் மீட்டில்  ஒரே நேரத்தில்  100 பேர் வரை குழு வீடியோ மாநாடுகளை இலவசமாக நடத்தலாம் என தற்போது கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் இந்த சூழலில் மக்கள் கூடுவதை தவிர்க்க உலக நாடுகள் முழுவதும் லாக் டவுன் எனப்படும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தபடுகின்றனர்.எனவே, வீடியோ கான்பரன்சிங் சேவைகள் மூலம் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜூம் நிறுவனம் இந்த வீடியோ கான்பரன்சிங் முறையில் புதிய வசதிகளை கொண்டு வந்தது. ஆனால் தகவல்கள் திருடப்படுகின்றனர் என்ற தகவலால் அதனை மக்கள் பயன்படுத்த தயங்கினர்.

மேலும், வாட்ஸ் ஆப் நிறுவனம் குறைந்தது 4 பேர் வரை பேசும் வகையில் வீடியோ கான்பரன்சிங் வசதியை அறிமுகம் செய்து வைத்தது. இந்நிலையில், இந்நிறுவனம் தற்போது 8 பேர் வரை இந்த சேவையை பயன்படுத்தும் வகையில் இந்த சேவையை விரிவு படுத்தியுள்ளது.

இந்த வீடியோ கான்பரன்சிங்  துறையில் தற்போது  கூகுள் தனது பிரீமியம் வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை வெளியிட்டது. இந்த, கூகிள் மீட்  முதலில் கட்டண கார்ப்பரேட் சூட் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக இந்த சேவையை ஒரே நேரத்தில்  100 பேர் வரை குழு வீடியோ மாநாடுகளை இலவசமாக நடத்தலாம் என தற்போது கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து, கூறிய தயாரிப்பு நிர்வாக இயக்குனர் ஸ்மிதா ஹாஷிம், இந்த குழு  சந்திப்பு பல வணிகங்களுக்கும் பள்ளிகளுக்கும், வேலையாட்களுக்கும், பலதரப்பினருக்கும்  எவ்வாறு உதவியது என்பதை நாங்கள் ஏற்கனவே பார்த்தோம். மேலும், தனிப்பட்ட பயனர்களுக்கும் உயர்தர மற்றும் மிகவும் பாதுகாப்பான சேவையின் தேவையை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம் என்று தெரிவித்தார்.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

9 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

17 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago