கூடுதல் பாதுகாப்பு!நவம்பர் 9 முதல் கூகுள் மாற்றும் முக்கிய அம்சம்!விவரம் இங்கே!

Published by
Edison

நவம்பர் 9 முதல்,அனைத்து கூகுள் கணக்குகளிலும் இரண்டு-படி சரிபார்ப்பு  செயல்முறை செயல்படுத்தப்படும் என்றும்,பயனர்கள் அவர்களின் கணக்குகளை அணுக இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னிலையில் உள்ள நிறுவனமான கூகுள்,தனது இயங்குதளத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது, இது வரும் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.நவம்பர் 9 முதல்,கூகுள் கணக்குகள் ஒரு பெரிய பாதுகாப்பு புதுப்பிப்பைப் பெறும்.இதன்மூலம் ,உங்கள் கணக்கிற்கான ஒரே கிளிக்கில்(one-click login )உள்நுழையும் அம்சத்திற்கு கூகுள் விரைவில் முற்றுபுள்ளி வைக்கவுள்ளது. இருப்பினும்,உங்கள் கணக்கில் உள்நுழைவதற்கான புதிய வழியை நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.அந்த வகையில்,கூகுள் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இரண்டு-படி சரிபார்ப்பு (2எஸ்வி) செயல்முறைக்கு செல்ல வேண்டும். இந்த புதிய உள்நுழைவு முறை உங்கள் கூகுள் கணக்கிற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில்,கடந்த மாதம் கூகுள் நிறுவனம் கூறியதாவது:“பல ஆண்டுகளாக, கணக்குகள் மற்றும் நெட்வொர்க்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுப்பதற்கான நம்பகமான வழிகளில் ஒன்றான இரண்டு-படி சரிபார்ப்பின் (2SV) புதுமைகளில் கூகுள் முன்னணியில் உள்ளது. 2SV ஆனது உங்களுக்குத் தெரிந்த ஒன்று, (கடவுச்சொல் போன்றது) மற்றும் “உங்களிடம் உள்ள ஒன்று” (உங்கள் ஃபோன் அல்லது பாதுகாப்பு விசை போன்றவை) இரண்டையும் இணைக்கும் போது வலிமையானது” என்று தெரிவித்துள்ளது.

கூகுள் அக்கவுண்ட் அப்டேட்டை எப்படிப் பெறுவது என்பது இங்கே:

  • உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைய 2SV தானாகப் பதிவு செய்யப்பட்டவுடன், முதலில் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
  • நீங்கள் உங்கள் மொபைல் எண்ணைக் கொடுக்க வேண்டும். உரை(text), குரல் அழைப்பு அல்லது கூகுளின் மொபைல் ஆப்ஸ் வழியாக OTP (ஒருமுறை-கடவுச்சொல்) அனுப்பப்படும்.
  • OTP ஐப் பெற்ற பிறகு, நீங்கள் உள்நுழைவு பட்டியில் குறியீட்டை(login bar) வழங்க வேண்டும்.
  • பலர் ஏற்கனவே தங்கள் கூகுள் கணக்குகளில் முதன்முறையாக உள்நுழையும் போது அல்லது புதிய சாதனத்தைப் பயன்படுத்தி உள்நுழையும் போது ஏற்கனவே 2SV ஐப் பயன்படுத்தி உள்ளனர். நவம்பர் 9 முதல், அனைத்து கூகுள் கணக்குகளிலும் இந்த செயல்முறை செயல்படுத்தப்படும் மற்றும் பயனர்கள் அவர்களின் கணக்குகளை அணுக இரண்டு-படி சரிபார்ப்பு முறையைப் பயன்படுத்த வேண்டும்.

2SV என்றால் என்ன?

இரண்டு-படி சரிபார்ப்பு என்பது ஹேக்கர்களிடமிருந்து சாத்தியமான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்வதாகும்.உங்கள் கடவுச்சொல் மற்றும் உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளடக்கிய இந்த செயல்முறையில், உங்கள் கடவுச்சொல்லை வைத்திருந்தாலும் ஹேக்கர்கள் உங்கள் தகவலை அணுக முடியாது என்பதை உறுதி செய்யும். யாராவது உங்கள் கடவுச்சொல்லை வைத்திருந்தாலும், உள்நுழையும்போது உங்கள் கணக்கை அணுக உங்கள் மொபைலில் அனுப்பப்பட்ட சரிபார்ப்புக் குறியீட்டை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…

4 minutes ago

அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!

மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

1 hour ago

அதிமுக – பாஜக கூட்டணி : “இனி யாரும் பேசாதீங்க..,” கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட இபிஎஸ்?

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…

2 hours ago

“எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!” நயினார் நாகேந்திரன் பேச்சு!

"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…

2 hours ago

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

10 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

12 hours ago