நவம்பர் 9 முதல்,அனைத்து கூகுள் கணக்குகளிலும் இரண்டு-படி சரிபார்ப்பு செயல்முறை செயல்படுத்தப்படும் என்றும்,பயனர்கள் அவர்களின் கணக்குகளை அணுக இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னிலையில் உள்ள நிறுவனமான கூகுள்,தனது இயங்குதளத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது, இது வரும் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.நவம்பர் 9 முதல்,கூகுள் கணக்குகள் ஒரு பெரிய பாதுகாப்பு புதுப்பிப்பைப் பெறும்.இதன்மூலம் ,உங்கள் கணக்கிற்கான ஒரே கிளிக்கில்(one-click login )உள்நுழையும் அம்சத்திற்கு கூகுள் விரைவில் முற்றுபுள்ளி வைக்கவுள்ளது. இருப்பினும்,உங்கள் கணக்கில் உள்நுழைவதற்கான புதிய வழியை நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.அந்த வகையில்,கூகுள் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இரண்டு-படி சரிபார்ப்பு (2எஸ்வி) செயல்முறைக்கு செல்ல வேண்டும். இந்த புதிய உள்நுழைவு முறை உங்கள் கூகுள் கணக்கிற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில்,கடந்த மாதம் கூகுள் நிறுவனம் கூறியதாவது:“பல ஆண்டுகளாக, கணக்குகள் மற்றும் நெட்வொர்க்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுப்பதற்கான நம்பகமான வழிகளில் ஒன்றான இரண்டு-படி சரிபார்ப்பின் (2SV) புதுமைகளில் கூகுள் முன்னணியில் உள்ளது. 2SV ஆனது உங்களுக்குத் தெரிந்த ஒன்று, (கடவுச்சொல் போன்றது) மற்றும் “உங்களிடம் உள்ள ஒன்று” (உங்கள் ஃபோன் அல்லது பாதுகாப்பு விசை போன்றவை) இரண்டையும் இணைக்கும் போது வலிமையானது” என்று தெரிவித்துள்ளது.
கூகுள் அக்கவுண்ட் அப்டேட்டை எப்படிப் பெறுவது என்பது இங்கே:
2SV என்றால் என்ன?
இரண்டு-படி சரிபார்ப்பு என்பது ஹேக்கர்களிடமிருந்து சாத்தியமான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்வதாகும்.உங்கள் கடவுச்சொல் மற்றும் உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளடக்கிய இந்த செயல்முறையில், உங்கள் கடவுச்சொல்லை வைத்திருந்தாலும் ஹேக்கர்கள் உங்கள் தகவலை அணுக முடியாது என்பதை உறுதி செய்யும். யாராவது உங்கள் கடவுச்சொல்லை வைத்திருந்தாலும், உள்நுழையும்போது உங்கள் கணக்கை அணுக உங்கள் மொபைலில் அனுப்பப்பட்ட சரிபார்ப்புக் குறியீட்டை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…