கடந்த ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்ட சம்பவங்களால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவு கடுமையாக பாதிக்கப்பட்டதாக சீனா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அவர்களுடன் நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் தொலைபேசி மூலம் 75 நிமிடங்கள் வரை பேசியுள்ளார். இவர்களின் பேச்சு வார்த்தைக்குப் பின்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாங்காங் சோ ஏரி பகுதியில் இரு தரப்புப் படைகளும் முழுமையாக வாபஸ் பெறப்பட்ட பின்பு, இந்தியா சீனா இடையே கிழக்கு லடாக்கின் புற பகுதிகளில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும், இதற்கு இரு நாடுகளும் முன்வரவேண்டும் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
அதனை அடுத்து கடந்த ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் நடந்த சில சம்பவங்களால் இந்தியா மற்றும் சீனா இடையிலான நல்லுறவு கடுமையாக பாதிக்கப்பட்டதாக சீன அமைச்சர் கூறியுள்ளார். மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மேலும் பல நாட்கள் ஆகலாம், இருந்தாலும் எல்லையில் நிகழ்ந்த வன்முறை காரணமாக நல்லிணக்கமும் சிதைந்து போய்விட்டது என இரு அமைச்சர்களும் பேசி உள்ளனர். மேலும், தொடர்ந்து இரு அமைச்சர்களும் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் பேசியுள்ளனர்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை…
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…