வியாட்னாமில் ஒரு ஹோட்டல் தங்கள் வாடிக்கையாளர்களை கவருவதற்காக ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் தங்கும் அறை முழுவதும் தங்க முலாம் பூசியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு போடப்பட்டு இருந்தது. தற்போது வைரஸ் தொற்று குறைவாக உள்ள பல்வேறு நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வியட்நாம் நாட்டில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து வியட்நாமில் உள்ள ஒரு ஹோட்டல் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. அந்த ஹோட்டல் தன் வாடிக்கையாளர்களை கவர ஒரு புதிய யுக்தியை கையாண்டு உள்ளது. அதாவது அந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் தங்கும் அறையானது முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட குளியலறை, கை கழுவும் இடங்கள் கழிப்பறைகள் என அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்டு ஜொலி ஜொலிக்கும் வண்ணம் இருக்கின்றன.
இந்த டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டலானது ஹோவா குழுமத்திற்கு சொந்தமானது. இது அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட விந்தாம் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் இன்க் இந்த ஹோட்டலை நிர்வகிக்கிறது. இந்த ஹோட்டலில் தங்க முலாம் பூசுவதற்கு மட்டும் சுமார் 1 டன் (1000 கிலோ) தங்கம் பயன்படுத்தப்பட்டது என அந்த ஹோட்டல் முக்கிய நிர்வாகி தகவல் தெரிவித்து அதிரவைத்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…