வியாட்னாமில் ஒரு ஹோட்டல் தங்கள் வாடிக்கையாளர்களை கவருவதற்காக ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் தங்கும் அறை முழுவதும் தங்க முலாம் பூசியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு போடப்பட்டு இருந்தது. தற்போது வைரஸ் தொற்று குறைவாக உள்ள பல்வேறு நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வியட்நாம் நாட்டில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து வியட்நாமில் உள்ள ஒரு ஹோட்டல் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. அந்த ஹோட்டல் தன் வாடிக்கையாளர்களை கவர ஒரு புதிய யுக்தியை கையாண்டு உள்ளது. அதாவது அந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் தங்கும் அறையானது முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட குளியலறை, கை கழுவும் இடங்கள் கழிப்பறைகள் என அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்டு ஜொலி ஜொலிக்கும் வண்ணம் இருக்கின்றன.
இந்த டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டலானது ஹோவா குழுமத்திற்கு சொந்தமானது. இது அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட விந்தாம் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் இன்க் இந்த ஹோட்டலை நிர்வகிக்கிறது. இந்த ஹோட்டலில் தங்க முலாம் பூசுவதற்கு மட்டும் சுமார் 1 டன் (1000 கிலோ) தங்கம் பயன்படுத்தப்பட்டது என அந்த ஹோட்டல் முக்கிய நிர்வாகி தகவல் தெரிவித்து அதிரவைத்துள்ளார்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…