தோண்ட தோண்ட கிடைத்த தங்கம்…! மலையை சுற்றி வளைத்த பாதுகாப்பு படை வீரர்கள்…!

Published by
லீனா

காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தின் லுகிகி என்ற கிராமத்தில் இருக்கும் மலை ஒன்றில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது காணப்படுவதாக உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடான, காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தின் லுகிகி என்ற கிராமத்தில் இருக்கும் மலை ஒன்றில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது காணப்படுவதாக உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தி கிராமம் முழுவதும் தீயாய் பரவியதையடுத்து, கோடாரி, கடப்பாரை போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மலைப்பகுதிக்கு மக்கள் விரைந்தனர். அங்கு மண்ணை தோண்டி போட்டி போட்டுக்கொண்டு மக்கள்  தங்கத்தை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின் அதனை  பையில் போட்டு எடுத்துக் கொண்டு சென்றனர். மக்கள் அவர்கள் எடுத்த  அந்த மண்ணை தண்ணீரில் போட்டு, தங்க தாதுக்களை மட்டும் தனியாக பிரித்தெடுத்தனர்.

இதனையடுத்து, பத்திரிகையாளர் ஒருவர் இது தொடர்பான வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், இதுகுறித்து தகவல் அரசுக்கு தெரியவந்தது. இதனை அடுத்து அப்பகுதி அந்த மலையில் மண்ணை தோன்றுவதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர். மேலும் இந்த மலை முழுவதும் தங்கம் இருக்கலாம் என்று எண்ணி, மலையை சுற்றிலும்  பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மக்கள் தங்களுக்கு வேண்டிய அளவு தங்கத்தை பெயர்த்து எடுத்து சென்று விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Published by
லீனா
Tags: GoldSoldier

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago