புவி வெப்பமயமாதலால் கடல் நீர் மட்டம் உயரும்… 77 கோடி பேரின் வாழ்வாதரம் கேள்விக்குறி… ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு…

Published by
Kaliraj

நாளுக்கு நாள் புவி வெப்பமடைவதால் வரும்  2100ஆம் ஆண்டில் கடல் நீர் மட்டம் சுமார்  ஒரு மீட்டர் உயரத்திற்கு மேல் உயரக் கூடும் என தற்போது அறிவியல் அறிஞர்கள் உலக நாடுகளை  எச்சரித்துள்ளனர். ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் உள்ள பருவநிலைத் தாக்க ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட அறிவியல் அறிஞர்கள், புவி வெப்பமடைதல் குறித்து ஓர் ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில், வரும் 2100ஆம் ஆண்டில் புவி வெப்பநிலை இப்போது உள்ளதை விட மூன்றரை டிகிரி செல்சியல் அதிகரிக்கும் என்றும், இதன்விளைவாகக் கடல் நீர் மட்டம் 130 சென்டிமீட்டர்  வரை உயர்ந்துவிடும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் 2300ஆம் ஆண்டுகளில் அண்டார்க்டிகா, கிரீன்லாந்து ஆகிய பனிப்பிரதேசங்கள் உருகிக் கடல் மட்டம் 5 மீட்டருக்கு மேல் உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி உலக மக்கள் தொகையில் பத்து சதவீத மக்கள்  அதாவது 77 கோடிப் பேர் கடலின் உயர் அலை மட்டத்துக்கு மேல் 5 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வாழ்விடங்கள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Published by
Kaliraj

Recent Posts

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

37 minutes ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

2 hours ago

அன்னா கிராம்லிங்க்கு செக்! கண்ணை மூடி கொண்டு வீழ்த்தி அசத்திய மேக்னஸ் கார்ல்சன்!

ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…

2 hours ago

கொல்கத்தாவுக்கு பயத்தை காட்டிய பூரன்! லக்னோ வைத்த பெரிய இலக்கு!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…

3 hours ago

ஒண்ணும் தெரியாம விஜய் பேச வேண்டாம்! பதிலடி கொடுத்த தமிழிசை சௌந்தரராஜன்!

சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…

3 hours ago

பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…

3 hours ago