நாளுக்கு நாள் புவி வெப்பமடைவதால் வரும் 2100ஆம் ஆண்டில் கடல் நீர் மட்டம் சுமார் ஒரு மீட்டர் உயரத்திற்கு மேல் உயரக் கூடும் என தற்போது அறிவியல் அறிஞர்கள் உலக நாடுகளை எச்சரித்துள்ளனர். ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் உள்ள பருவநிலைத் தாக்க ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட அறிவியல் அறிஞர்கள், புவி வெப்பமடைதல் குறித்து ஓர் ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில், வரும் 2100ஆம் ஆண்டில் புவி வெப்பநிலை இப்போது உள்ளதை விட மூன்றரை டிகிரி செல்சியல் அதிகரிக்கும் என்றும், இதன்விளைவாகக் கடல் நீர் மட்டம் 130 சென்டிமீட்டர் வரை உயர்ந்துவிடும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் 2300ஆம் ஆண்டுகளில் அண்டார்க்டிகா, கிரீன்லாந்து ஆகிய பனிப்பிரதேசங்கள் உருகிக் கடல் மட்டம் 5 மீட்டருக்கு மேல் உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி உலக மக்கள் தொகையில் பத்து சதவீத மக்கள் அதாவது 77 கோடிப் பேர் கடலின் உயர் அலை மட்டத்துக்கு மேல் 5 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வாழ்விடங்கள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…