உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் வருகிறது.
சீனாவிலுள்ள உகைன் நகரில் துவங்கி தற்பொழுது உலகம் முழுவதிலும் பரவி 1 கோடி 30 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதித்துள்ள கொடிய உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இந்த வைரஸால் இதுவரை உலகளவில் 1,32,29,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5,74,981 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7,691,451 பேர் குணமாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 195,878 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 3,731 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 4,963,263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த இரு தினங்களை கணக்கிடுகையில் உலகளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் நாளொன்றுக்கு தோராயமாக 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.
ஆனால், 1.95 பாதிப்புகளே கடந்த 2 தினங்களாக உள்ளது. மேலும் நேற்று முன்தினம் கணக்கெடுப்பின் படி உயிரிழப்பு 3,956 ஆக இருந்தது. இன்று குறைந்து 3,731 ஆக உள்ளது. உயிரிழப்பு கடந்த ஒரு வாரத்தில் குறைந்தது 5 ஆயிமாக இருந்தது, தற்பொழுது 3 ஆயிரத்தை நெருக்கியே வருகிறது. உலகளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து உள்ளது தற்போதைய கணக்கெடுப்பில் தெரிகிறது. இதே போல முழுவதுமாக கொரோனாவின் தாக்கம் குறைய நாம் விழித்திருப்போம், தனித்திருப்போம்.
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…