உலகளாவிய கொரோனா வைரஸ் ஜூலை-5: தென்னாப்பிரிக்காவில் ஒரு நாளில் 10,000க்கும் மேல் கொரோனா.!

Default Image

உலகளவில் 200,000க்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உலக சுகாதார அமைப்பு, மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின், மற்றும் எச்ஐவி மருந்தான லோபினாவிர்/ரிடோனாவிர் ஆகிய மருந்துகளின் சோதனை முடிவுகளை உலக சுகாதார அமைப்பு சனிக்கிழமை வெளியிட்டது.

இந்நிலையில் உலகளவில் கொரோனா பாதிப்பு 1.13 கோடியை கடந்து. ஒரு சில இடங்களில் மட்டுமே அமைதி காக்கும் கொரோனா, பல இடங்களில் தனது வீரியத்தை காட்டிக் கொண்டே தான் உள்ளது. இதுவரை உலக அளவில் 1 1,386,867 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 533,619 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா கொரோனா பாதிப்பு:-

அமெரிக்க கொரோனா தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறி வருகிறது.  நாடு முழுவதும் பல இடங்களில் கேசலோட்ஸ் ஸ்பைக் காணப்படுகிறது.அங்கு மொத்த பாதிப்பு 2,936,122 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 1,32,318 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவரின் எண்ணிக்கை 1,260,619ஆக அதிகரிப்பு.

ரஷ்யாவின் கொரோனா பாதிப்பு:-

ரஷ்யா இன்று 6,736 புதிய கொரோனா வைரஸ்கள் உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 6,81,251 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 134 பேர் இறந்துவிட்ட நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,161 ஆக உயர்ந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு:-

ஒரே நாளில் 10,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு உறுதியானதாக தென்னாப்பிரிக்கா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மொத்த பாதிப்பு 187,977 க்கும் உயர்ந்துள்ளது. இது ஆப்பிரிக்காவின் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு 3,000 இறப்புகளைக் கொண்டுள்ளது.

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு:-

ஜெர்மனியில் இன்று கொரோனா தொற்று 239 ஆக அதிகரித்து மொத்தம் 196,335 ஐ எட்டியுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 9,012 ஆக உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்