தோனி விளையாட நினைக்கும் வரை அவர் விளையாட வேண்டும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கருத்து!

Default Image

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிலென் மெக்ரத் இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார்.கடந்த 19-ம் தேதி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மெக்ராத் இந்தியா அணி வீரர்களின் செயல்பாடுகளைக் குறித்து கூறினார். அப்போது பேசிய அவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வை பற்றி பேசினார்.
அவர் கூறுகையில் “தோனியின் ஓய்வைப்பற்றி விவாதங்கள் நடைபெறுகிறது.மேலும் தோனி கிரிக்கெட்டில் விளையாட நினைக்கும் வரை அவர் விளையாட வேண்டும் ஒரு நாள் போட்டியில் அவரது சிறந்த அனுபவம் இந்திய அணிக்கு மிகவும் உதவும் என நினைகிறேன்.
மேலும்  இந்திய அணியின் பந்து வீச்சை பற்றியும் கூறினார்.அதில் ஆஸ்திரேலியா விற்கு இந்திய அணி சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடிய போது இந்திய அணியின் பந்து வீச்சு மிக சிறப்பாக இருந்தது.குறிப்பாக பும்ராவின் பந்து மிக அற்புதமாக இருந்தது என மெக்ராத் கூறினார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்