நண்பர்களுக்கு இடையே, இருநாட்டு தேசிய தினங்களும் பகிரப்படுவதில் மகிழ்ச்சி – பிரதமர் ஸ்காட் மோரிசன்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினமும் கொண்டாடப்படுவது தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் – பிரதமர் ஸ்காட் மோரிசன்
இன்று இந்தியாவில் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார். குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவில் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியாவில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினமும் கொண்டாடப்படுவது தற்செயலாக நிகழ்ந்த அதிசயம்.
தேசிய நாள் மட்டுமல்லாமல், ஜனநாயகம், சுதந்திரம், பன்முகத்தன்மை என அனைத்தையும் இந்தியா – ஆஸ்திரேலியா பகிர்ந்துள்னன. நண்பர்களுக்கு இடையே, இருநாட்டு தேசிய தினங்களும் பகிரப்படுவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.