தீராத கண் திருஷ்டி விலக..!பொல்லாத பார்வையிலிருந்து விடுபட..!இந்த கயிற்றை கட்டிக்கொள்ளுங்கள்..!

Published by
Sharmi

தீராத கண் திருஷ்டி விலகுவதற்கு எப்படி கருப்பு கயிறு அணிய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

சிலருக்கு கண் திருஷ்டி காரணமாக பல்வேறு பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கும். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்றொரு பழமொழி உண்டு. அதற்கேற்றாற்போல் சிலரது பார்வை ஒருசிலரின் வாழ்க்கையில் பெரிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்தும். இப்படி இருக்கும் பொல்லாத பார்வையிலிருந்து நம்மை காத்துக்கொள்ள கருப்பு கயிறு அணியலாம்.

சிலர் கருப்பு கயிற்றினை கை, கணுக்கால், இடுப்பு அல்லது கழுத்தில் கட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இப்படி அணிவதன் மூலமாக கண் திருஷ்டி நம்மிடம் இருந்து விலகும். பொதுவாகவே, கருப்பு நிறம் சுப நிகழ்ச்சிகளில் அபசகுனமாகவே பார்க்கப்படுகிறது. பலரும் அந்த நிற உடையை அணிவதை தவிர்ப்பதை பார்த்திருப்போம். அப்படிப்பட்ட இந்த கருப்பு நிற கயிற்றை மற்றவர் பார்வையில் படும்படி அணிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், கருப்பு நிறம் சனீஸ்வர பகவானுக்குரிய நிறம்.

ஒவ்வொருவரும் அவரவர்களது வினைகளுக்கு ஏற்ப நன்மை மற்றும் தீமையை அடைவர். மனதில் இருக்க கூடிய எதிர்மறை எண்ணங்கள் விலகி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க இந்த கருப்பு கயிறு பயன்படுகிறது. இந்த கயிற்றை எப்படி அணிந்து கொள்ள வேண்டும், எப்போது அணிய வேண்டும் இதை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த கயிற்றில் ஒன்பது முடிச்சுகள் போட்டு கட்டிக்கொள்ள வேண்டும். இதனை அணிவதற்கு முன்னர் சனீஸ்வர பகவானின் பாதத்தில் வைத்து பூஜை செய்து கட்டுவது சிறப்பாகும்.

மேலும், அணியும் பொழுது ஆஞ்சநேயர் மற்றும் துர்காதேவியை மனதார நினைத்து கொண்டு ஸ்ரீ ராம ஜெயம் கூறி அணிவதன் மூலமாக அந்த கயிற்றின் சக்தி அதிகரிக்கும். இந்த கயிற்றை சனிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணியளவில் கட்ட வேண்டும். காலில் அணிகிறீர்கள் என்றால் வலது புற கணுக்காலில் மட்டுமே அணிய வேண்டும். இவ்வாறு கட்டிக்கொள்ளும் இந்த கருப்பு கயிறு மூலமாக உங்களது மேல் படும் பொல்லாத பார்வை அனைத்தும் விலகி விடும். மேலும், இதனால் தொழிலிலும், குடும்பத்திலும் மகிழ்ச்சி ஏற்படும்.

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

33 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

36 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

1 hour ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

4 hours ago