ஜெர்மனியில் முக கவசம் அணியாமல் சென்றால் ரூ.8.25 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை அதிகம் தாக்கி வருகிறது.
இந்நிலையில், ஜெர்மனியில் 159,912 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,314 ஆக உள்ளது. இதையெடுத்து, ஜெர்மனி ஊரடங்கை அறிவித்துவிட்டு, கடந்த வாரம் சில நிபந்தனைகளை தளர்த்தியது, பொது இடங்களில் மக்கள் முக கவசம் சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
ஆனால், அதை அதிகமான மக்கள் கடைபிடிக்காமல் பொது இடங்களில் சென்று வந்தன.இதனால், ஜெர்மனி அரசுஅவசர அவசரமாக ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், பேருந்து மற்றும் ரயில்களில் நீண்டதூரம் பயணம் செய்பவர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பொருட்கள் வாங்கச் செல்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
முக கவசம் அணியாமல் செல்வது சட்டப்படி குற்றமாகும். இடங்களுக்கு ஏற்றாற்போல இந்திய மதிப்பில் ரூ.8.25 லட்சம வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…