ஜார்ஜியா வாக்கு மறுகூட்டல் பைடனின் வெற்றியை மாற்றப்போவதில்லை – ஜார்ஜியா வெளியுறவுத்துறை அமைச்சர்!

Default Image

ஜார்ஜியா வாக்கு மறுகூட்டல் பைடனின் வெற்றியை மாற்றப்போவதில்லை என அம்மாநில வெளியுறவுத்துறை அமைச்சர் ராஃபென்ஸ்பெர்கர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஒரு மாத காலமாக தேர்தல் நடைபெற்று மிக விறுவிறுப்பாக வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு அதில் ஜோ பைடன் அவர்கள்தான் முன்னிலையில் இருக்கிறார்கள். அவர் தான் வெற்றியாளர் எனவும் மக்களாலும் அரசியல்வாதிகளாலும் நம்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் தனது தோல்வியை டிரம்ப் தற்பொழுதுவரை ஒப்புக் கொள்வது போல் இல்லை. ஜார்ஜியா மாகாணத்தில் தற்போது மறுகூட்டல் நடைபெற்று வருகிறது. இந்த ஒரு மாகாணத்தில் நடக்கக்கூடிய மறுகூட்டலால் பைடனுக்கு தோல்வி இல்லை என்று அனைவரும் அறிந்ததுதான்.

இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் வெளியுறவுத் தறை அமைச்சர் ராஃபென்ஸ்பெர்கர் அவர்கள் இது குறித்து கூறுகையில், இன்னும் சில மாவட்டங்களில் உள்ள வாக்குகள் மட்டும் எண்ணிக்கை முடிந்து வர காத்திருக்கிறது. ஆனால் பெரிய மாவட்டங்களில் எல்லாம் நாங்கள் எண்ணி முடித்து விட்டோம். மொத்தமாக ஜார்ஜியா மாநிலம் முழுவதிலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்தாலும் அது பைடனின் வெற்றியை மாற்றும் என நான் நம்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்