ஜார்ஜியாவில் ஏற்பட்ட விமான விபத்து.. 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி!

Default Image

ஜார்ஜியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் வில்லிஸ்டனைச் சேர்ந்த அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் மற்றும் பைலட் என மொத்தம் 5 பேர் , உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சிறிய ரக விமானத்தில் நேற்று மாலை இண்டியானாவுக்கு சென்றனர். இந்த விமானம் ஜார்ஜியா வான்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றி எரிந்தது.

தீப்பிடித்து எறிந்த விமானம், வேகமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 2 வயது குழந்தைகள் உட்பட 5 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து, புத்னம் கவுண்டி மில்லட்வில்லே பகுதியில் உள்ள ஒரு சிதறிய வயல்வெளியில் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர், அந்த விமானம் வானில் சிறிது நேரம் வட்டமிட்டதாகவும் பின்னர் தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்ததாகவும் தெரிவித்தார். மேலும், இந்த விபத்து குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்