பாகிஸ்தானில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தின் வாஷுக் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பில் 8 பேர் உயிரிழந்ததாகவும் மற்றும் 5 பேர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் திங்கள்கிழமை மாலை ஏற்பட்ட குண்டுவெடிப்பு குறித்த தகவல்களை மாவட்டத்தின் மாஷ்கெல் பகுதியின் உதவி ஆணையர் ஹமீத் ஹம்சா பாங்குல்சாய் பகிர்ந்து கொண்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் வாஷுக் மாவட்டத்தின் மாஷ்கெல்லில் ஒரு வெல்டிங் பட்டறையில் ஒரு பெருவெடிப்புடன் ஒரு எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக ஆணையர் ஹமீத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸாரும், மீட்புக் குழுக்களும் வெடிப்பு நடந்த இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வாடிக்கையாளர்கள் கொண்டு வந்த எரிவாயு சிலிண்டரை சரிசெய்ய தொழிலாளர்கள் வெல்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தும்போது வெடிப்பு நிகழ்ந்ததாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…