ஆவணி மாதம் சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகமும், மனித உடலும் கொண்டு சிவபெருமான் படைத்து, கஜமுகசுரனை அழிக்க அனுப்பி வைத்தார். இதனால் தான் அவனிமாதம் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
புராணகாலத்தில் கஜமுகாசுரன் எனும் அரக்கன் சிவபெருமானிடம் வரம் பெற அவரை வேண்டி மேற்கொண்ட தவத்தின் பலனாய் சிவபெருமான் அருள் பெற்று, கஜமுகாசுரன் ஒரு வரம் பெற்றான். அந்த வரத்தின் படி, விலங்குகளால், மனிதர்களால், ஆயுதங்களால் அழிக்க முடியாத வரம் பெற்றிருந்தான். இந்த வரத்தை பெற்றப்பின் தேவர்களை பலவழிகளில் துன்புறுத்தி வந்தான்.
எனவே, தேவர்கள் ஒன்று திரண்டு சிவபெருமானிடம் இதனை கூறினார். உடனே சிவன் ஆவணிமாத சதுர்த்தியன்று விநாயகரை யானை முகமும், மனித உடலும் கொண்டு படைத்தார். விநாயகரை கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.
விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் இடையே ஏற்பட்ட போரில் விநாயகர் தனது கொம்புகளில் ஒன்றை உடைத்து கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்து அவனை மூஞ்சூறாக மாற்றி தனது வாகனமாக வைத்து கொண்டார். இதனால்தான் ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் தீராத வினை எல்லாம் தீரும் என்பது ஐதீகம்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…