எதில் எல்லாம் பிள்ளையார் பிடித்து வழிபடலாம்..!வழிபட்டால் இத்துணை பலன்களா..!

Published by
kavitha

கணபதி என்று சொல்லி விட வல்வினைகள் கலங்கும் அவனை சரணடைந்தவனுக்கு இல்லை சங்கடம் என்று தன் பக்தர்களுக்கு வரங்களை வாரி கொடுப்பவர் ஆனைமுகன் நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

வீட்டில் பூஜையறையில் நாம் பூஜையை துவங்கும் முன்னர் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவது வழக்கம் ஏன் பிள்ளையாரை பிடித்து வைக்கிறோம் அவற்றால் என்ன பயன் மேலும் இது போல் இன்னும் எவற்றில் எல்லாம் பிள்ளையார் பிடித்து வழிபடலாம் அவற்றால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிவித்து கொள்வோம்.

பிள்ளையாரை  பிடித்து வைக்கும் பொருட்கள் :

Image result for பிள்ளையார் பிடித்து வைத்து

மஞ்சள் , குங்குமம் , புற்று மண்,வெல்லம், உப்பு , வெள்ளெருக்கம், விபூதி,சந்தனம், வெண்ணெய்,சர்க்கரை,பசுஞ்சாணம் ,சாணம், வாழைப் பழம் ,கல் விநாயகர்,மண்

பிள்ளையாரை  பிடித்து வைக்கும் பொருட்களால் ஏற்படும் பலன்கள் :

மஞ்சளில் பிள்ளையாரை  பிடித்து வழிபட்டால்  சகல சௌபாக்கியமும் கிடைக்கும் மற்றும்
காரிய சித்தி அருள்வார்.

குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் முற்றிலுமாக அகலும்.
குழந்தைகள் படிப்பில் மந்தநிலை மாறி படிப்பில் வல்லவராகுவார்.

புற்று மண்ணால் பிள்ளையார்  பிடித்து வழிபட்டால் தீரா நோய்கள் அகன்று உடல்நிலை சீராகும்.விவசாயம் செழிக்கும்.

வெல்லத்தால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் உடலில் ஏற்படும் கட்டிகள் கரையும்.

உப்பினால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எதிரிகள் தொல்லை நீங்கி உங்களை விட்டு விலகுவர்.

வெள்ளெருக்கினால் பிள்ளையார்  பிடித்து வழிபட்டால் ஏவல் ,பில்லி, சூனியம் போன்றவைகள்  விலகும்.செல்வம் நிலை உயரும்.

விபூதியால் பிள்ளையார்  பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் முற்றிலுமாக விலகும்.

சந்தனத்தால் பிள்ளையார் பிடித்து வழிப்பட்டால்  புத்திர பேறு கிடைக்கும்.

சாணத்தால் பிள்ளையார் பிடித்து வழிப்பட்டால்  சகல தோஷமும் விலகி விடும் மேலும் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறம்.

வாழைப்பழத்தில் பிள்ளையார் பிடித்து வழிப்பட்டால்  குடும்பத்தில் வம்ச விருத்தி உண்டாகும்.

வெண்ணெய்யில் பிள்ளையார் பிடித்து வழிப்பட்டால் கடன் தொல்லை அகலும்.

சர்க்கரையில் பிள்ளையார் பிடித்து வழிப்பட்டால்  படுத்தும் சர்க்கரை நோயின் வீரியமானது  குறையும்.

பசுஞ்சாணத்தில்  பிள்ளையார் பிடித்து வழிப்பட்டால்  நோய்கள் விலகி ஐஸ்வர்யம் பெருகும் .

கல்லால்  செய்த பிள்ளையார்  வெற்றி ஈட்டித் தருவார்.

மண்ணால் செய்த பிள்ளையார்  உயர் பதவிகள் கொடுத்து அருள்வார்.

இவ்வாறான பொருள்களில் பிள்ளையாரை பிடித்து நாம் பூஜையறையில் பூஜைக்கு முன் செய்து வழிபட்டால் பலன்களை அள்ளி தருவார் ஆனைமுகன்.

 

 

Published by
kavitha

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

7 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

9 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

11 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

11 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

12 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

13 hours ago