எல்லையை தாண்டியது நீங்களே!! கையை நீட்டும் சீனா!

Default Image

இந்திய எல்லைப்பகுதிக்குள் இருக்கும் லடாக்கின் கிழக்கே  உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு திடீரென்று சொந்தம் கொண்டாடி வரும் சீனா அடுத்தடுத்து அத்துமீறுதல் மட்டுமின்றி ஆக்கிரமிப்பு முயற்சியில் முன்வகித்து வருகிறது.இதன் காரணமாக இந்திய-சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.மேலும் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் சீன ராணுவம் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவி அப்போது த பதற்றத்தை பற்றவைத்தது.

இதனால் பனிப்போர்  ஏற்பட்டு வந்த நிலையில் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே மே 5 மற்றும் 6-ந்தேதிகளில் மோதல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை குறைப்பதற்காக நடந்த பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் படை விலக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தது.இந்த பணியின் போது கடந்த 15ந்தேதி இரவு மீண்டும் இருதரப்பு வீரர்களும் மோதிக்கொண்டனர்.

இதில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீனா தரப்பில் 35 பேரும் உயிரிழந்தாக தகவல் வெளியாகி அதிர்ச்சி அடைய செய்தது. இந்திய இது குறித்து கூறுகையில் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா ஊடுருவியதே இந்த மோதலுக்கு காரணம் என கூறியது.ஆனால் சீனா தரப்பில்  இந்திய வீரர்கள் எல்லை தாண்டியதால் தான் பதற்றத்திற்கும், மோதலுக்கும் உயிரிழப்புக்கும்  காரணம் என குற்றம் சாட்டியுள்ளது. மேலும் சீனா கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்கு சொந்தமானது;

அந்த பகுதியில் கடந்த மாதம் மே.,6ந்தேதி இந்திய வீரர்கள்  எல்லை தாண்டியதாகவும் மீண்டும் அந்நாடு அபாண்டமாக குற்றம் சாட்டி உள்ளது.இறுதியாக சீனா, எல்லையை தாண்டியது நீங்களே நாங்கள் எல்லை ;எல்லைப்பகுதி எங்களுடையது என்று சூசமான தன்னுடைய பதிலால் மீண்டும் இந்தியாவை சீண்டும் வகையில் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்