முழு சுதந்திரம் முன்னேறுங்கள்! உத்வேக உத்தரவு

Published by
kavitha

முழுசுதந்திரம் அளிக்கப்பட்டது இந்திய ராணுவத்தினர்க்கு எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்து  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய எல்லைப்பகுதிக்குள் இருக்கும் லடாக்கின் கிழக்கே  உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு திடீரென்று சொந்தம் கொண்டாடி வரும் சீனா அடுத்தடுத்து அத்துமீறுதல் மட்டுமின்றி ஆக்கிரமிப்பு முயற்சியில் முன்வகித்து வருகிறது.இதன் காரணமாக இந்திய-சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.மேலும் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் சீன ராணுவம் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவி அப்போதே பதற்றத்தை பற்றவைத்தது.

இதனால் பனிப்போர்  ஏற்பட்டு வந்த நிலையில் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே மே 5 மற்றும் 6-ந்தேதிகளில் மோதல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை குறைப்பதற்காக நடந்த பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் படை விலக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தது.இந்த பணியின் போது கடந்த 15ந்தேதி இரவு மீண்டும் இருதரப்பு வீரர்களும் மோதிக்கொண்டனர்.

இதில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீனா தரப்பில் 35 பேரும் உயிரிழந்தாக தகவல் வெளியாகி அதிர்ச்சி அடைய செய்து நாட்டு மக்களிடையே கடும் கோபத்தையும் , வெறுப்பையும் பெற்றுள்ளதையும் சீனா பொருட்களுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில்  நாட்டில் நிலவும் வெப்பத்தை விட எல்லையில் வெப்பம் கனலாக தகித்து வருகிறது.எல்லைத்தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,  ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவணே,கடற்படைத் தளபதி கரம்வீர் சிங்,விமான படைத் தளபதி ஆர்.கே.எஸ் பதௌரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் எல்லைப்பகுதிகளான அருணச்சல பிரதேசம், சிக்கிம்,உத்தரகண்ட்,ஹிம்மாச்சல பிரதேசம் உள்ளிட்ட சீன  எல்லைப்பகுதிகள் குறித்தும் நிலபரப்பு,வான்பரப்பு,கடற்பரப்புகளில் சீனாவின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு  உயர்அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.மேலும் பதற்றமாக இருக்கும் எல்லையில்  சூழ்நிலையைப் பொறுத்து முடிவெடுக்க  ராணுவ தளபதிகளுக்கு முழுசுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
kavitha

Recent Posts

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து! 

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

4 hours ago

உக்ரனை அடுத்து ஈரான்? அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட வேண்டும். இல்லையென்றால்? டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…

4 hours ago

INDvsNZ : தடுமாறும் நியூசிலாந்து! பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

5 hours ago

4 மாவட்டங்களில் மிக கனமழை! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…

8 hours ago

சாமி இந்தியா ஜெயிக்கணும்.., மும்பை, உஜ்ஜயினி, லக்னோ கோயில்களில் சிறப்பு பூஜைகள்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…

9 hours ago

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முக்கிய 3 முடிவுகள்.! 7 மாநிலங்களில் 29 கட்சிகளுக்கு முதலமைச்சர் கடிதம்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…

10 hours ago