முழு சுதந்திரம் முன்னேறுங்கள்! உத்வேக உத்தரவு

Published by
kavitha

முழுசுதந்திரம் அளிக்கப்பட்டது இந்திய ராணுவத்தினர்க்கு எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்து  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய எல்லைப்பகுதிக்குள் இருக்கும் லடாக்கின் கிழக்கே  உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு திடீரென்று சொந்தம் கொண்டாடி வரும் சீனா அடுத்தடுத்து அத்துமீறுதல் மட்டுமின்றி ஆக்கிரமிப்பு முயற்சியில் முன்வகித்து வருகிறது.இதன் காரணமாக இந்திய-சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.மேலும் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் சீன ராணுவம் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவி அப்போதே பதற்றத்தை பற்றவைத்தது.

இதனால் பனிப்போர்  ஏற்பட்டு வந்த நிலையில் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே மே 5 மற்றும் 6-ந்தேதிகளில் மோதல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை குறைப்பதற்காக நடந்த பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் படை விலக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தது.இந்த பணியின் போது கடந்த 15ந்தேதி இரவு மீண்டும் இருதரப்பு வீரர்களும் மோதிக்கொண்டனர்.

இதில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீனா தரப்பில் 35 பேரும் உயிரிழந்தாக தகவல் வெளியாகி அதிர்ச்சி அடைய செய்து நாட்டு மக்களிடையே கடும் கோபத்தையும் , வெறுப்பையும் பெற்றுள்ளதையும் சீனா பொருட்களுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில்  நாட்டில் நிலவும் வெப்பத்தை விட எல்லையில் வெப்பம் கனலாக தகித்து வருகிறது.எல்லைத்தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,  ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவணே,கடற்படைத் தளபதி கரம்வீர் சிங்,விமான படைத் தளபதி ஆர்.கே.எஸ் பதௌரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் எல்லைப்பகுதிகளான அருணச்சல பிரதேசம், சிக்கிம்,உத்தரகண்ட்,ஹிம்மாச்சல பிரதேசம் உள்ளிட்ட சீன  எல்லைப்பகுதிகள் குறித்தும் நிலபரப்பு,வான்பரப்பு,கடற்பரப்புகளில் சீனாவின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு  உயர்அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.மேலும் பதற்றமாக இருக்கும் எல்லையில்  சூழ்நிலையைப் பொறுத்து முடிவெடுக்க  ராணுவ தளபதிகளுக்கு முழுசுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
kavitha

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

55 mins ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

58 mins ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 hour ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago