டாஸ்க்கில் இணைப்பை துண்டித்து சோமுக்கு விட்டு கொடுத்த கேபி.!

Default Image

டாஸ்க்கில் கால் சென்டரில் ஊழியராக வேலை செய்யும் கேபியிடம் சோம் கால் செய்து பேசிவிட்டு கேபி காலை துண்டித்து சோமுக்கு விட்டு கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் வழங்குவது வழக்கம் .அந்த வகையில் பிக்பாஸ் வீடு அடுத்த இரு தினங்களுக்கு கால் சென்டராக மாறுகிறது.இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கால் சென்டரில் வேலை செய்யும் ஊழியர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு வரம்பு எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.அவ்வாறு வாடிக்கையாளர்கள் ஊழியரை வெறுப்பேற்றும் படி பேசி அவரே போன் காலை துண்டிக்கும் படி செய்ய வேண்டும்.

அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் நேருக்கு நேர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் பிக்பாஸ் கால் சென்டரில் ஊழியராக உள்ள கேபிக்கு சோம் கால் செய்து , நண்பர்களை போன்று சிரித்து பேசியவாறு இருக்க ,சோம் நீங்கள் காலை துண்டிக்கலாம் என்று கூற ,கேபியும் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று கூறி காலை துண்டிக்கிறார் . அதனையடுத்து நான் போனை கட் பண்ண சொன்ன பண்ணுவியா ? என்று சோம் கேட்கிறார் . அதனுடன் சனம் அவர்கள் நீங்கள் கட் செய்தால் தோல்வி அடைந்து அடுத்த வார நாமினேஷனில் நாமினேட் செய்யப்படுவீர்கள் என்று கூற , கேபியோ ஆம் நான் தெரிந்து தான் வைத்தேன் என்று கூறுகிறார்.

இதனையடுத்து பாலாஜி நேற்று தான் கூறியது உண்மையாகி விட்டது என்றும் ,எப்ப பார்த்தாலும் பெஸ்ட் பிளேன்னு கொடுக்க ஒரு கூட்டம் இருக்கு,அதனால் அவன் விளையாட மாட்றான் என்று சோம் சேகரை குறித்து சனம் மற்றும் அனிதாவிடம் கூறுகிறார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்