சின்னத்திரை நடிகை சித்ராவின் இறுதி ஊர்வலம்.! கண்ணீர் அஞ்சலி செலுத்த திரளும் ரசிகர்கள்.!

Published by
Ragi

சின்னத்திரை நடிகை சித்ராவின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வரும் நிலையில் அவருக்கு வழி முழுவதும் ரசிகர்கள் கூட்டமாக கூடி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் வெளியான அறிக்கையில் சித்ராவின் மரணம் தற்கொலை என்று காவல்துறை தெரிவித்துள்ளது .

இதனையடுத்து அவரின் உடல் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இறுதி சடங்குகள் நடைபெற்றது .இதில் ரசிகர்கள்,ஊர் பொதுமக்கள் என பலர் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். இவரது இறுதி ஊர்வலம் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த இறுதி ஊர்வலத்தில் சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்கள் என பலர் கதறி அழுது கொண்டே பங்கேற்று வருகின்றனர் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலையோரம் நின்று சித்ராவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இவரின் இறுதி ஊர்வலத்தில் கூட்டம் அலை மோதும் கால் போலீசார் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .இவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது .

Published by
Ragi

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago