வங்காளதேசத்தில் ஒருவாரம் நீட்டிக்கப்படுகிறது முழு ஊரடங்கு..!

Default Image

வங்காளதேசத்தில் மேலும் ஒருவாரம் முழு ஊரடங்கை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அண்டை நாடான வங்காள தேசத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்ததை அடுத்து ஜூலை 1-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளையுடன் முடிவடையும் இந்த ஊரடங்கை தற்போது மேலும் ஒரு வாரம் நீட்டித்துள்ளது. கடந்த 24  மணி நேரத்தில் 9,964 பேருக்கு புதிதாக அந்நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 164 பேர்  உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் அதிகரித்த தொற்று பாதிப்பு, இறப்பு எண்ணிக்கை காரணமாக நாட்டில் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டித்துள்ளனர். நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை ஜூலை 14 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்