லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்ட்ர் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் அர்ஜூன், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதில் ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றனர். பள்ளி படிப்பு முடிந்தவுடன் மேல் படிப்பு படிக்க முடியாமல் தாமதமாக கோயம்பத்தூர் கல்லூரியில் சேரும் ஒரு வடமாநில இளைஞராக ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் அர்ஜூன் அவர்கள் வில்லன் ரோலில் நடிக்கிறாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கிற்கு முன் 50% முடிந்ததாகவும், தற்போது லாக்டவுன் காரணமாக தள்ளி வைத்ததாகவும், விரைவில் கொரோனா பாதிப்பு முடிந்ததும் படத்தை முடித்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பதாகவும் சமீபத்தில் இயக்குநர் ஜான் பால் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்ட்ர் இன்று 4 மணிக்கு வெளியிடுவதாக இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் முதல் முறையாக சினிமாவில் நடிக்கும் இந்தப் படத்தினை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றே கூறலாம்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…