உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இந்த வைரஸ் நோய் முதலில் சீனாவில் தொடங்கி, தொடர்ந்து 210 நாடுகளை பாதித்துள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்சில், ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 779 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 ஆயிரத்து 967 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று இந்த நாட்டில் கண்டறியப்பட்ட நாள் முதல் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல், கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு மே மாதம் 11-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான எல்லைகளும் அடுத்த உத்தரவு வரும் வரை தொடர்ந்து மூடியே இருக்கவும் என்றும், மே 11-ம் தேதி புதிய கட்டம் தொடங்கும். அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும் எனவும் அப்போதைய நிலைமையின் அடிப்படையில் விதிமுறைகள் வகுக்கப்படும் என்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : 2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியன் பட்டம் வெல்ல இன்னும் இரண்டு போட்டிகள்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025) சுமார் 8 ஆயிரத்து 144 பேர் அரசுப்…
திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல்…
கொரியா : கொரியாவின் குமியில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இன்றைய தினம் இந்திய தடகள வீரர்கள் தங்கப்…
சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர்…
சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில்…